21.பொருத்துக.
அ)முண்டணையா மூட்டு 1)கட்டை விரல்
ஆ) சேண மூட்டு 2)முள்ளெலும்பு
இ) வழுக்கு மூட்டு 3)மணிக்கட்டு
A)3 1 2
B)1 2 3
C)3 2 1
D)2 3 1
22. மூட்டு:
அ) மூட்டுகள் என்பவை இரண்டு எலும்புகள் சந்திக்கும் அல்லது இணையும் இடமாகும்.
ஆ) மூட்டுகளின் அழற்சி என்பது பொதுவாக கீழ்மூட்டில் ஏற்படும் உராய்வின்காரணமாக வோ அல்லது மூட்டுகளில் சினோவியல் திரவம் இல்லாததாலோ ஏற்படுகின்றது.
இ) முளை அச்சு மூட்டு உருண்டை அல்லது கூர்மையாக உள்ள ஒரு எலும்பானது வளையவடிவ எலும்பான ஆரமுன் கால் எலும்புடன் இணைந்துள்ளது.
தவறானவை:
A )அ மற்றும் இ
B)ஆ மற்றும் இ
C)இ மட்டும்
D)எதுவுமில்லை
23.ஆக்சிஜனைக் கண்டறிந்தவர்
A)டால்டன்
B)ஹிஸ்புல் மார்டின்
C) C.W.ஷீலே
D)பிரிஸ்ட்லி
24.கூற்று:நைட்ரஜனின் கரைதிறனையே ஆக்சிஜனும் கொண்டிருக்குமானால் கடல், ஆறு, ஏரி போன்ற நீர் நிலைகளில் வாழும்
உயிரினங்களுக்கு உயிர் வாழ்தல் மிகவும்
கடினமான செயலாக இருக்கும்.
காரணம்:ஆக்சிஜனானது நைட்ரஜனைவிட இருமடங்கு நீரில் அதிகமாகக் கரையும்
தன்மை உடையது.
A)கூற்று சரி காரணம் தவறு
B)கூற்று, காரணம் தவறு
C)கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரி
D )கூற்று ,காரணம் சரி;கூற்றுக்கான காரணமும் சரியல்ல
25.சிறிதளவு பாஸ்பரஸ் துண்டினை வெப்பப்படுத்தி அதனை ஆக்சிஜனுள்ள
குடுவையினுள் நுழைக்கவும். பாஸ்பரஸ் மூச்சடைக்கும் வாசனையுடன் எரிந்து
கிடைக்கும் அலோகம்?
A.பாஸ்பரஸ் டிரைஆக்சைடு (P2O3)
B.பாஸ்பரஸ் பென்டாக்சைடு (P2O5)
C.பொட்டாசியம் ஆக்சைடு (K2O)
D.மெக்னீசியம் ஆக்ஸைடு(MgO)
26.கூற்று:1 தூய மழை நீரின் pH மதிப்பு 5.6 ஆக இருக்கிறது.
கூற்று:2
அமில மழையின் pH மதிப்பு 5.6 ஐ விட அதிகம்
காரணம்: ஏனெனில் வளிமண்டலத்திலுள்ள கார்பன் டைஆக்சைடு இந்நீரில் கரைந்திருக்கிறது
A. கூற்று 1 கூற்று 2 சரி காரணம் தவறு
B. கூற்று 1 சரி கூற்று 2 தவறு காரணம் சரி
C. கூற்று 1 தவறு கூற்று 2 சரி காரணம் தவறு
D. கூற்று 1 கூற்று 2 தவறு காரணம் சரி
27.அமிலமழை உருவாக காரணமான மாசுபடுத்திகள்?
A )ஆர்மோனியம், சில்வர் நைட்ரேட்
B )நைட்ரஜன்,சல்பர் ஆக்ஸைடுகள்
C ) மெக்னீசியம், காப்பர் சல்பேட்
D) அம்மோனியா, நைட்ரஜன் ஆக்ஸைடு
28. 1)தாமிரக் கம்பி குறைந்த அளவு மின்தடையைக் கொண்டிருப்பதால், அது
எளிதில் வெப்பமடைவதில்லை
2)மின்விளக்குகளில் பயன்படுத்தப்படும் டங்ஸ்டன் அல்லது நிக்ரோம் ஆகியவற்றின் மெல்லிய கம்பிகள் அதிக மின்தடையைக்
கொண்டுள்ளதால் எளிதில் வெப்பமடை கின்றன.
சரியானவை:
A)1 மட்டும்
B )2 மட்டும்
C) 1,2
D)எதுவுமில்லை
29.குறைவான உருகுநிலை கொண்ட வெள்ளீயம் மற்றும் காரீயம் கலந்த உலோகக்கலவையினால் தயாரிக்கப்பட்ட துண்டுக்கம்பியே
A)மின்உருகி
B)மின்கொதிகலன்
C)மின்இஸ்திரிப்பெட்டி
D)மின்இறக்கமானி
30
1)உலோகங்கள் மின்சாரத்தைக் கடத்தும்.
2)கரைசல் ஒன்றின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது கரைசலில் சில
வேதிவினைகள் உண்டாகி,மின்சாரத்தைக் கடத்தும் மின்னூட்டத்தை உண்டு பண்ணுகின்றன.
3)உலோகங்களை அவற்றின்தாதுப்பொருள் களிலிருந்து பிரித்தெடுத்தல் மற்றும் தூய்மைப்படுத்துதலில் மின்னாற்பகுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
4)இரும்பின் மீது ஏற்படும் அரிமானம் மற்றும் துருப்பிடித்தலைத் தவிர்ப்பதற்காக அதன்மீது குரோமியப்படலம்
பூசப்படுகிறது.
தவறானவை:
A )2 4
B )1 2
C )3 4
D )அனைத்தும்