டெஸ்லா நிறுவனத்திற்கு பத்திரிகை அலுவலகம் இல்லை.
அதன் நிர்வாக தலைவர் எலான் மஸ்க் அதற்கான தேவையும்
இல்லை என்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பை போல ஏதேனும் தகவலை
பரிமாற அவர் டிவிட்டரை பயன்படுத்துகிறார்.
அதேபோன்றுதான் வெள்ளிக்கிழமையன்று ட்வீட் செய்வதில் அதீத மும்முரம் காட்டினார் எலான் மஸ்க்
எலான் மஸ்க் குறித்து புதிய
புத்தகம் ஒன்று வருகிறது. அதில் 2016ஆம்
ஆண்டில் எலான் மஸ்க் நெருக்கடியை சந்தித்தபோது
ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக், டெஸ்லா நிறுவனத்தை வாங்குவார்
என்ற நம்பிக்கையில் அவரை தொடர்பு கொண்டதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஆப்பிள்
நிறுவனத்தின் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும்
என்று கோரியுள்ளார் எலான் மஸ்க், அதன்பின் டிம் குக் எங்கு செல்ல வேண்டும் என்று
கோரியுள்ளார் என்றும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்கிடம் இதுகுறித்து கேள்வி
எழுப்ப அவருக்கு பத்திரிகை அலுவலகம் இல்லை.
எனவே டிவிட்டரிலேயே அந்த செய்தி உண்மையா என கேள்வி எழுப்பினேன்.
எனது கேள்விக்கு அவர் பதில் தந்தார். ஆனால் அதனை தொடர்ந்து பதியப்பட்ட டிவிட்டர்
பதிவுக்கு அவர் அளித்த பதிலும் ஒரு
முக்கிய செய்திதான்.
சரி முதலில் எனது கேள்விக்கு அவர் அளித்த பதிலை பார்ப்போம், குக்கும் நானும்
இதுவரை சந்தித்ததோ அல்லது எழுத்துப் பூர்வமாக
தொடர்பு கொண்டதோ இல்லை.
ஒரு தருணத்தில் டெஸ்லாவை ஆப்பிள்
நிறுவனம் வாங்கி கொள்வது குறித்து பேச
குக்கை நான் சந்திக்க விரும்பினேன். ஆனால்
நான் எந்த நிபந்தனைகளையும் வைக்கவில்லை.
குக் என்னை சந்திக்க மறுத்துவிட்டார். அப்போது டெஸ்லாவின் மதிப்பு இப்போது இருக்கும் மதிப்பில் 6 சதவீதம்தான்.
சரி இது என்னுடைய கேள்விக்கான
பதில். அடுத்து எலான் மஸ்க் சொன்ன அந்த செய்தி என்ன தெரியுமா?
எலான் மஸ்க் எனது பதிவிற்கு பதிலளித்தபோது, வேறொரு டிவிட்டர் பயனர் ஒருவர் எலான் மஸ்க் ஆப்பிளின் சிறந்த முதன்மை நிர்வாகியாக
இருப்பார் என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க் ’நான் எந்த நிறுவனத்திற்கும்
சிஇஓ-வாக விரும்பவில்லை’ என்று தெரிவித்துள்ளார்
கடந்த மாதம் நீதிமன்றம் ஒன்றில்
ஆதாரங்கள் குறித்து பேசும்போதும் எலான் மஸ்க் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
"டெஸ்லாவின்
தலைவராக இருப்பதை நான் வெறுக்கிறேன். அதற்கு
பதிலாக டிசைனிங் அல்லது பொறியியல் சார்ந்து
பணியாற்ற விரும்புகிறேன்"
என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும் டெஸ்லாவின் சிஇஓ-வாக தான் தொடர்வது குறித்த
காரணத்தையும் அவர் தெரிவித்தார். "எனக்கு வேறு வழியில்லை. வெளிப்படையாக
சொல்ல வேண்டும் என்றால் தலைவராக இல்லையென்றால்
டெஸ்லா அழிந்துவிடும்"
என்றார்.
இவ்வாறு எலான் மஸ்க் தொடர்ச்சியாக கூறுவது சில முதலீட்டாளர்களை
வருத்தமடைய செய்யலாம்.
அவரை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும்,
எலான் மஸ்கின் ஆளுமைதான் டெஸ்லாவின் வெற்றிக்கு
காரணம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
உலகளவில் அதிக மதிப்பு கொண்ட
ஒரு கார் நிறுவனம் டெஸ்லா.
எலான் மஸ்க் டெஸ்லாவின் தலைவர்
மட்டும் அல்ல.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் அவர்தான் தலைவர். மக்களை நிலவிற்கு அனுப்ப நாசா இதனுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது.
2016ஆம்
ஆண்டு `தி போரிங் கம்பெனி` என்னும்
நிறுவனத்தையும் தொடங்கியிருந்தார்
எலான் மஸ்க். சுரங்க தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தி பயணங்களில் மாற்றங்களை கொண்டு வருவது அதன் திட்டம். எலான்
மஸ்க் தான் நிறுவனங்களின் தலைவராக இருக்கவில்லை என்று கூறுவதன் மூலம் தான் ஏதோ சந்தர்ப்பத்தில் சிக்கியுள்ளதை போல காட்டி கொள்கிறார்.
இருப்பினும் புதிய யோசனைகள், தொழில்நுட்பங்கள்,
பொறியியல் ஆகியவற்றால் உத்வேகம் பெறுபவர். இது
அனைத்துமே ஒரு நிறுவனத்தின் தொடக்கத்தில் முக்கிய
தேவை. ஆனால் தொடக்கத்திலிருந்து பெரிய நிறுவனமாகும் பட்சத்தில் தலைவர்
பொறுப்பு என்பது ஒரு அசாத்திய பொறுப்பு
கொண்டதாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப், கூகுள் நிறுவனத்தின் லேரி
பேஜ் மற்றும் செர்கே ப்ரின், மைக்ரோசாஃப்டின்
பில் கேட்ஸ் ஆகியோர் தொலைநோக்கு பார்வையாளர்கள்.
இருப்பினும் இந்த நிறுவன்ங்களின் தற்போதைய தலைவர்கள் இவர்களிலிருந்து
மாறுபட்டவர்கள். கூகுள்
நிறுவனத்தின் சுந்தர் பிச்சை மற்றும் மைக்ரோசாஃப்ட்
நிறுவனத்தின் சத்திய நாடெல்லா ஆகியோர் சிறந்த
தலைவர்கள். சிலர் அவர்களை தொலைநோக்கு பார்வையாளர்கள்
என்றும் குறிப்பிடுகின்றனர்.
எலான் மஸ்க் தன்னை ஆபத்துகளுக்கு அஞ்சாத ஒரு தொழில் முனைவோராகவே காட்டி கொள்கிறார். ஒரு நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்பதை நம்மால் உணர முடியும்.