
தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று
தீர்மானித்தார்.
அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.
முதுமைக் காலத்தில் அவருக்குத் திருமண
ஆசை ஏற்பட்டது. அவருடைய நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.
ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம்
உரையாடிக் கொண்டீருந்தபோது
தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.
" முல்லா
இந்த முதுமைப் பிராயத்தில் உங்களுக்குத் திருமணம்
அவசியம்தானா? உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம்
ஏற்பட்டது?" என
நண்பர்கள் கேட்டனர்.
முல்லா வழக்கமான சிரிப்புடன் பேசத்
தொடங்கினார்.
" நண்பர்களே,
உங்கள் அன்பான கருத்துக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும். இளமைப் பருவமோ - முதுமைப்
பருவமோ ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து
கொள்வதற்கு இது ஒரு காரணம் எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும்
உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான்
மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு
வழி பிறக்கும் அல்லவா?"
முல்லாவின் இந்தப் பதிலைப் கேட்ட
நண்பர்கள் " முல்லா
அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு
வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து
விட்டால்?" என்று
கேட்டனர்.
" வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன்" என்று முல்லா பதிலளித்தார்.