தற்சார்பு இந்தியா கோட்பாட்டின் கீழ் மத்திய நிதி அமைச்சர் 5 கட்ட அறிவிப்புகளாக ரிசர்வ் வங்கி அளித்துள்ள சலுகை ஏழைகளுக்கான நலத்திட்ட உதவி என மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்து 97 ஆயிரத்து 053 கோடி பொருளாதார நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டது. இதில் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மருத்துவம், கல்வி, பொதுத்துறை நிறுவனங்கள், வணிகம் பொதுத்துறை நிறுவனங்கள், கொரோனா காலத்தில் வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏழு அறிவிப்புகள் வெளியாகின.